Thursday, 15 November 2018

புகழின் புதுக்கவிதை:-

புகழின் புதுக்கவிதை:- 
புகழின் புதுக்கவிதை:- 
புகழே! நீ ஒரு கணிகை, கால் கடுக்க உன்னைத் தேடி அலைபவர்களிடம் காசு பெற்றுக் காதல் வழங்குகிறாய்! 

புகழே! நீ ஒரு சந்திர மண்டலம். உன்னை முழுமையாக அடையும் முயற்சியில் பல மேதைகள் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. 

புகழே! நீ இமயத்தின் உச்சி. இடைவிட முயற்சியால் உன்னைச் சிலர் பிடித்து விடுவார்கள்! 

புகழே! நீ ஒரு பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளேயே வைத்து கெட்டியாகப் படிந்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்துவிடுகிறாய்! 

புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் வீழ்ந்த ஈ.க்கள் எழுந்ததே இல்லை! 

புகழே! நீ ஒரு நிழல். உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாய்!''

புகழ்வரினும் இகழ்வரினும்.... 
பாஸ் மார்க் அல்லது (டாஸ்...மார்க்)  

(``வைரமணிகள்') 

No comments:

Post a Comment