Wednesday, 4 November 2015

பானை பிடித்தவள் பாக்கியசாலி


பானை பிடித்தவள்  பாக்கியசாலி

நீ  அவளுக்கு கவிதை படித்து  
காக்கையாக கரைந்தாலும்....,  
அவளுக்கு உதவிட 
கழுதையாய் தேய்ந்தாலும்...,
நன்றி பாராட்டி 
நாயாய் அலைந்தாலும்....,  
உளறிக்கொட்டிய கவிதையால்...  
உன் குரங்கு புத்தி தெரிந்துவிட... 
குட்டு உடைந்துபோக....  
பானை பிடித்தவள் 
பாக்கியசாளி என 
யாரோ வெள்ளைக் குதிரையில் 
வந்தவன் அவளை தூக்கிச்சென்றான் ...(கோகி)

செயற்கைக் கொசு

"செயற்கைக் கொசு"
பொய்யான நோய்களை 
பரப்பிடும்
போலி மருத்துவர்களின்... 
கூலிப்படை ... (கோகி)